Dec 21, 2009

புரிந்தால் சரி...



இரு
இரும்பு உருளைகளுக்கு
இடையில் சிக்கிய
கரும்பு
நான் .

உங்கள் 'கனவு' சாறாக ..!
என் 'கனவுகள்' சக்கையாக ...!

Dec 9, 2009

சுவாசம்



கண்ணிலும்
சுவாசித்தேன்
முதன் முதலாய்.

தூசி விழுந்த
என் கண்ணை
உதடு குவித்து
நீ
ஊதியபோது.

Dec 4, 2009

மறுநடவு



அவள் தரப்பிலும் யாரும் இல்லை
என் தரப்பிலும் யாரும் இல்லை

கடவுளாய் மாற்றப்பட்ட
கற்சிலை முன்பு நலமாகவே நடந்தேறியது
எங்களின்
கந்தர்வக் கல்யாணம்

அதே வருடம் ஒரு வாரிசு
அடுத்த வருடமே விவாகரத்து

அழுதுச் சொன்னேன்
அழுந்தச் சொன்னேன்
வேண்டாமே இந்த "ரத்து" என்று.

அவள் -
கேட்கவுமில்லை
கேட்பதாகவும் இல்லை .
பிரிந்தே விட்டாள்
பிள்ளையும் என்னையும் விட்டு.

அது அவள் குற்றமில்லை
அழகின் கர்வம்
உடலின் திமிர்

காலம்
கடிகார முள்ளில்
சுற்றிச் சுற்றிச் சுருங்கியது -அவளின்
சருமம் போலவே.

நீண்ட இடைவெளி.......................

ஒரு நாள்,
பெண்களின்
பேராயுதமாம் கண்ணீர் - அதை
கண்களில் ஏந்தி
உழுதாள்...என்னை.

அவள் மனதின் மறு நடவிற்கு
இவனின் மனம் வேண்டும் என்று .

என் கை விரலை இறுகப்பற்றியபடி
கண் சிமிட்டினான் என் கண்மணி .

இறுக்கம் தளர்த்தி
இதயம் சொல்லியது
"பிரிந்தால் பாவம்-மீண்டும்
இணைந்தால் தீரும்" என்று.

Dec 1, 2009

நிர்வாணமாய் நீ



உன்னைக்
கரம்
பிடிக்க ஆசைதான்.
என்
விரல் பட்டாலே
நீ
தான்
ஒரு
மாதிரியாகி விடுகிறாய் ...

ஊரறியும்

உலகறியும்
நீ யொன்றும்
கண்ணகி
வம்சமில்லை என ...

வெட்ட வெளியினில்
நிர்வாணமாய்
நீ
இருக்கையில்
இன்றும்
ஒருமுறையென 
உள்ளுக்குள்

ஓர்
சபலம் உதிப்பது
உண்மை
.

உன்னருகே

நான் நெருங்குகையில்
உன்
அச்சம்
உணரமுடிகிறது
என்னால் .

இருந்தும்

உன்

சிணுங்கல்
விரும்பியே
தேடி
வந்து -உன்னைத்
தீண்டி
மகிழ்கிறேன் .




தொட்டாச்சிணுங்கியே !